Posted by in Latest News
இலங்கையின் கிராமிய மின்சாரக் கருத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கம் தனது உதவியை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது. இது தொடர்பான விஷேட பேச்சுவார்த்தை ஒன்று நேற்று ஈரானிய ஏற்றுமதிகள் அபிவிருத்தி வங்கியின் தலைவர் அலி சேலி ஹபாட் அவர்களுக்கும் மற்றும் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுக்கும் இடையில் அமைச்சின் கேட்பேர்கூடத்தில் இடம்பெற்றது. அந்தப் பேச்சுவாத்தைக்கு அமைய எதிர்வரும் ஒரு சில மாதங்களில் கிராமிய மின்சாரக் கருத்திட்டங்களுக்கு ஈரான் அரசாங்கத்திடம் இருந்து உதவிகள் கிடைக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.