Posted by in Latest News
இந்த வருட இறுதியினுள் முழு தீவையூம் மின்சாரத்தால் ஒளிமயப்படுத்த மஹிந்த சிந்தனையின் முன்னெடுப்பிற்கு அமைய மின்வலு சக்தி அமைச்சால் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ..உதுரு ஜனனி.. புதிய மின் நிலையம் இன்று காலை மின்வலு சக்தி அமைச்சர் வழக்கறிஞர் பவித்ரா வன்னி ஆரச்சி அவர்களின் அழைப்பில் அதிமேதக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
இது வரையில் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவூ செய்து யாழ்ப்பாண மக்களின் மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ததுடன் அதற்காக இ.மி.ச பாரிய தொகையை செலவிட்டது. மின்சக்தி துறை முகங் கொடுத்துள்ள நெருக்கடி நிலையில் இருந்து மீள விலை குறைந்த மின்சார உற்பத்தி முறையை பின்பற்றும் திட்டத்தின் கீழ் எண்ணெய் உபயோகித்து செயற்படும் இந்த புதிய மின் நிலையத்தில் ஒரு மின் அலகிற்காக செலவாகும் ரூ. 17.86 ஆகும். 24 மெகா வோட் திறனுடனான இந்த உதுரு ஜனனி மின் நிலையத்தில் வருடாந்த மின்சார திறன் 176 மில்லியன் அலகுகள் ஆகும். இதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருடாந்தம் ரூ. 1350 மில்லியன் தொகையை மீதப்படுத்த முடியூம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் வழிநடத்திலின் கீழ் தேசிய நிறுவனமான லக்தனவி நிறுவனத்தின் ஊடாக கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த மின் நிலையத்தின் வேலை பணிகள் இவ்வருடம் ஜகவரி மாதமளவில் நிறைவூ பெற்றது. தேசிய முதலீட்டில் தேசிய பொறியிலாளர்களின் தலையீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த “உதுரு ஜனனி” புதிய மின் நிலையத்திற்காக ரூ. 3500 மில்லியன் தொகை செலவாகியூள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. எரிபொருள் களஞ்சியப்படுத்தல்இ ஏனைய வசதிகளுடன் கூடிய இந்த மின் நிலையம் சுற்றாடல் சார் கழிவூ பொருட்கள் பயன்பாட்டு முறைமையையூம் கொண்டதாகும்.
இந்த விஸேட நிகழ்வில் மின்வலு சக்தி பரதி அமைச்சர் ப்றேமலால் ஜயசேகர அவர்கள்இ சிறு கைத்தொழில் மற்றும் சிறு வியாபார அபிவிருத்தி அமைச்சர் டக்லஸ் தேவானந்தஇ சப்ரகமுவ மாகாண சபை தலைவர் திரு.காஞ்சன ஜயரத்ன அவர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற எறப்பினர்கள் மேலும் வெளிநாட்டு அரச முதலீட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.