16 0

Posted by  in Latest News

மின் பாதுகாப்பு மற்றும் மீள் பயன்படுத்தல் தொடரபாக இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை…

மின்சக்கதி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு செக்கோஸ்லாவியா தூதுவர் மிலோஸ் லேவ் ஸ்டசக்கிற்கும் இடையில் இன்று 2011.02.15 விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. மின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இலங்கை பின்பற்றும் முறை தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இதன்போது மின் பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பாக அமைச்சர் தூதுவருக்கு விளக்கமளித்தார். விலை கூடிய எண்ணெய்களை பயன்படுத்தி மின் உற்ப்பத்தி செய்வதைவிட காற்று சூரியசக்தி போன்றவற்றை பயன்படுத்தி மின் உற்ப்பத்தி செய்வது பொருளாதாரத்திற்கு நன்மைபயக்கும்  என அமைச்சர் செக்கோஸ்லாவியா தூதுவரிடம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக  இரு நாடுகளுக்கும் இடையில் நிலவூம் உறவை பலப்படுத்த இலங்கைக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என செக்கோஸ்லாவியா தூதுவர் தெரிவித்தார். இது தொடர்பாக அரச தலைவரை அறிவூறுத்துவதாகவூம் இலங்கையில் மின் உற்ப்பத்தியை அதிகரிக்க ஒத்துழைப்பு வழங்க எதிர்;ப்பார்;ப்பதாகவூம் செக்கோஸ்லாவியா தூதுவர் வலியூறுத்தியூள்ளார்.