Posted by in Latest News
நாட்டில் 4வது தொழினுட்ப நகராக நியமிக்க திட்டம்
திருகோணமலை மின்சார நுகர்வோருக்காக பிரதி பொது முகாமையாளர் அலுவலகம்,
நுகர்வோர் சேவைமத்திய நிலையம் மற்றும் மின்சார பொறியியலாளர் அலுவலகம்
கிழக்கு மாகாண விஷேட சுற்று பயணத்தில் கலந்து கொண்ட இமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்க்ளஇ பதவி ஸ்ரீ புரஇ மொரவெவஇ கந்தளாய்இ சேருவிலஇ தம்பலகாமம்இ ஆகிய பிரதேசங்களில் 775 குடும்பங்களுக்காக 639 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் திட்டங்கள் 08 கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் திறந்து வைக்கப்பட்டது.
இச்சுற்று பயணத்தை தொடர்ச்சியாக நேற்று (2012.09.04) கந்தளாய் அக்கிரபோதி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற மின்சார தொலைதொடர்பு சேவையில் பங்கேற்ற அமைச்சர் ரணவக்க அவர்கள்……
தீவிரவாத தாக்கத்தில் இருந்து மீண்ட மக்களுக்கு மின்சாரம் பெற்று கொடுத்துஇ ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் பெற்று கொடுத்துஇ அம்மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றௌம். திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையிலும் 80மூ மின்சார வசதியை பெற்று கொடுத்துள்ளோம். இந்த வருட முடிவினுள் மீதமான 20மூ மின்சாரத்தையூம் வழங்கி முழு மாவட்டத்தையூம் நாம் மின்சாரமயப்படுத்துவோம். அதே போல மிகக் குறுகிய காலத்தில் திருகோணமலை மாவட்ட மக்ககள் பாரிய மின் நிலையங்கள் இரண்டின் உரிமையாளராகுவார்கள். இது வைரயிலும் அதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக கொடுமையான தீவிரவாதத்திற்குட்பட்டுஇ இருண்டு காணப்பட்ட திருகோணமலை மாவட்டம் நாகரிக நகரமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் குறிப்பிட்டார்.
இங்கு தனது கருத்தை வெளியிட்ட அமைச்சர் ரணவக்க அவர்கள்இ
முழு நாட்டிற்கும் மின்சாரத்தால் ஒளிமயப்படுத்த திட்டமிடப்பட்டது 2017 ஆம் ஆண்டிலாகும். எனினும் நாம் அந்த கால வரையறையை விரைவூபடுத்தி 2012 ஆம் ஆண்டு முடிவிற்கு முன்னர் அதனை நிறைவேற்ற திட்டமிட்டு உள்ளோம். ஒரு வீட்டிற்கு மின்சாரத்தை பெற்று கொடுக்க எமக்கு பல இலட்சங்கள் விரயமாகின்றது. எனினும் வீட்டு நுகர்வோருக்கு மின்சாரத்தை பெற்று கொடுக்க நாம் செலவிடுவது மிகக் குறைந்த தொகையாகும். அதே போன்று மின்சார உரிமையை பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட முறைகளை விரிவூபடுத்தினோம். சமுர்த்தி ஊடாக ரூ.30இ000.00 கடன் பெற்று கொடுப்பதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் காணப்படும் மக்களுக்கு மின்சார வசதியை பெற்று கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தோம். அதே போல ஒரு வருடமான குறுகிய காலப் பகுதியில் பதிவினை உறுபடுத்துவதன் மூலம் மின்சா வசதி பெற்று கொள்ளும் முகமாக சட்டத்தை இலகுபடுத்தினோம். இந்த நாட்களில் மின்சார துறை முகங் கொடுப்பது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தற்காலிக பிரச்சினை ஆகும். அதனால் நாம் பொது மக்களிடம் கேட்டு கொள்வது யாதெனில்இ விஷேடமாக மாலை 6.30 தொடக்கம் இரவூ 9.30 வரையான காலப் பகுதியில் குறைந்த பாவனை ஊடாக மின்சக்தி பாதுகாப்பிற்கு ஒத்துழைத்துஇ தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை பெற்று கொள்ளுமாறு ஆகும்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்……இ
மின்சாரம் மக்களின் வாழ்க்கையில் ஒரு பாகம் ஆகும். நாம் மின்சாரத்தை பெற்று கொடுப்பதன் பிரதான குறிக்கோள் எமது குழந்தைகளின் கண்களை திறந்து அவர்களை குறித்த இடத்திற்கு கொண்டு வருதலாகும். இக்கிராம பிள்ளைகள் வைத்தியராகவூம் பொறியியலாளராகவூம் சேவை புரிய கிராமத்திற்கு வரும் நாளில் தான் நாம் இக்கஷ்ட நிலையை மீளும் நாளாகும். மின்சாரம் கிடைத்து விட்டது என்று நாம் சந்தையில் பிரச்சாரங்களுக்கு ஏமாற கூடாது. எமக்கு பொருத்தமானதையே நாம் தெரிவூ செய்ய வேண்டும். வீட்டில் சுய தொழில் புரியூம் இளைஞர் யூவதிகளுக்கு விருத்தி செய்து கொள்ளவூம்இ சிறிய கடையை பெரிய கடையாக மாற்றவூமே நாம் மின்சாரத்தை வழங்குகின்றௌம். அதே போல அரசியல்வாதிகள் பின்னால் சென்று அரச தொழிலுக்காக கெஞ்சாது நாட்டிற்கு அபிவிருத்தியை தேடி தரும் பிரதேச இளைஞர் யூவதிகளை நான் வரவேற்கின்றேன் என குறிப்பிட்டார். நாம் தெரிவூ செய்ய வேண்டிய வழிமுறைகள் இரண்டு உள்ளது. அதில் ஒன்று தான் இரத்தம் கண்ணீர் சிந்தி இறப்பை தேடிக் கொள்ளல் மற்றையது அபிவிருத்தி சுகாதாரம் விருத்தி செய்து அபிவிருத்தியை நோக்கி செல்லும் மார்க்கம் ஆகும். இவை இரண்டிலும் தாம் செல்லும் மார்க்கத்தை தெரிவூ செய்யூம் உரிமை மக்களுக்கே உள்ளது என அமைச்சர் அவரல்கள் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அப் பிரதேச அரசியல்வாதிகள் இ.மி.ச சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் பெருந்தொகையினர் கலந்து கொண்டனர்.
![]() |
![]() |
![]() |
![]() |